Thursday, April 11, 2013

காகம் கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது சரியா?


 

காகம் கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கை இந்து சமயத்தினரிடயே உள்ளது. இது உண்மையா?

காகங்களை முன்னோர்களாகக் கருதி அவைகளுக்கு உணவு படைக்கும் வழக்கம் இந்து சமயத்தினரிடையே ஒரு வழக்கமாக இருக்கிறது. மேலும் காகம் கத்தும் திசைக்குக் கூட முக்கியத்துவமும் அளிக்கின்றனர்.

காகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்பது உண்மையல்ல. விருந்தினர் வந்தால் காகம் கத்தும் என்பதன் உருமாற்றமே இந்தச் செய்தி.

விருந்தினர் வந்தால் நிறைய உணவு வகைகள் தயாரிப்பார்கள். இப்படி தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் மிச்சமிருந்தால் அதைக் காகத்திற்கு அளிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் “விருந்து கழிந்தால் காகம் கத்தும்” என்று சொல்லப்பட்டது.

காலப்போக்கில் காகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்கிற நிலைக்கு மாறிப் போய்விட்டது என்பதுதான் இங்கு உண்மை.

No comments:

Post a Comment