Saturday, August 23, 2014

பிள்ளையார் சுழி!

பிள்ளையார் சுழி!
மகாபாரதம் முழுக்கதையையும் வியாசரின் மனதில் தோன்றி நிலைத்துவிட்டது!
லட்சத்துக்கும் மேல் ஸ்லோகங்களைக் கொண்ட அந்தக் காவியத்தை எப்படி எழுதுவது?
அவ்வளவையும் எழுதுவது என்பது மிகவும் சிரமமான காரியம்!
தேவலோகத்திலும் அதை எழுத யாரும் முன்வரவில்லை!
செழுமையான கற்பனையோடு கூடிய அக்கதையை யார் எழுதுவது?
மிகவும் கடினமான அக்காரியத்தை தான் முடித்துத் தருவதாக விநாயகர் ஒப்புக்கொண்டார், ஒரு நிபந்தனையுடன்!
""என்ன அது?'' என்று வியாசர் கேட்டார்.
""நடுவில் நிறுத்தக்கூடாது... அப்படி நிறுத்தினால் நான் எழுந்து போய்விடுவேன்'' என்றார் விநாயகர்.
வியாசரும் ஒரு நிபந்தனை விதித்தார். ஸ்லோகங்களைப் புரிந்துகொண்டு எழுதவேண்டும் என்பதே அது!
இந்தப் பெரிய காரியத்திற்காக, தியாக உணர்வுடன் தனது தந்தத்தையே உடைத்து எழுதத் தயாராகி விட்டார் விநாயகர்! (யானைக்குத் தந்தம் அழகல்லவா?)
புரிந்துகொள்ள சிக்கலாக உள்ள இடங்களில் விநாயகர் சற்று யோசிக்க, வியாசர் பல ஸ்லோகங்களை மனனம் செய்து தயாராகி விடுவார்!
இப்படித்தான் முழு மகாபாரதமும் வெற்றிகரமாக எழுதப்பட்டது!
எனவேதான் இப்பொழுதும் எதை எழுதுவதென்றாலும் தாளின் உச்சியில் "பிள்ளையார் சுழி' போடுகிறோம்!

No comments:

Post a Comment