Saturday, June 13, 2015

''தேடி வரும் தெய்வம் ''

''தேடி வரும் தெய்வம் ''
பசுமாடு ஒன்றை கன்றுடன் விலைக்கு வாங்கிய ஒருவன், தன் ஊருக்கு அவற்றைஓட்டிச்சென்றான். பசுவின் பின்னால் கன்று வந்து கொண்டிருந்தது. திடீரென்றுபசு முரண்டு பிடித்து நின்று விட்டது. அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் நகரமறுத்தது. அங்கு வந்த பெரியவர் என்னவென்று விசாரிக்க அவனும் விவரத்தைசொன்னான். அதற்கு அவர், "கவலைப்படாதே, நீ கன்றை ஓட்டிக்கொண்டு முன்னால்செல், தாய்ப்பசு தானாகவே உன் பின்னால் வந்துவிடும்", என்றார். அவனும்அவ்வாறே செய்தான். உடனே தாய்ப்பசுவிரைவாக அவனைப் பின் தொடர்ந்து நடக்கஆரம்பித்தது. இறைவனும் அப்படித்தான். அவன் பிள்ளைகளே எல்லோரும் என்பதால்,பிறருக்கு நாம் உதவினால், நம்மைத் தேடி வந்து அவன் அருள்வான்

No comments:

Post a Comment