Friday, December 21, 2012

ஆன்மிகம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவன் ஆண்டவனை அறியமுடியாது.

 யாரொருவர் இறைவனை அடையவேண்டும் என்று எப்போதும் ஏங்குகிறாரோ அவரின் மீதே இறைவனின் கருணை விழத் தொடங்கும்.
* அன்பினால் வசப்படுத்தினால் ஆண்டவன் அகப்பட்டு விடுவான் என்பதை அருளாளர்களின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
* ஆன்மிகப்பயிற்சி பழகப்பழக இறைவனின் அருளை நாம் உணரலாம். இறுதியில் இறைவனைத் தரிசிக்கும்பேறு உண்டாகும்.
* இறைவனை எப்போதும் தன் இதயகமலத்தில் தாங்கிக் கொண்டு வாழ்பவனே பக்தன்.
* அவதார புருஷர்களை நினைப்பதும் ஆண்டவனை நினைப்பதும் ஒரே பலனைத் தரும்.
* வாழ்வில் எத்தனை இடையூறு, ஆபத்து நேர்ந்தாலும் ஞானி ஒருபோதும் கவலை கொள்வதில்லை.
* இறைவனை அறிந்த ஞானி உலகப் பொருள்களின் மீது பற்று வைப்பதில்லை.
* பக்தனுக்கு இறைநாமத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கவேண்டும். இறைவனும் இறைநாமமும் வேறு வேறல்ல.
* இறைவனே இந்த உலகமாக இருக்கிறான் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் நம்முடைய சிக்கல் அனைத்தும் ஒழிந்துவிடும்.
* மனதில் தீய சிந்தனைகள் இருக்கும் வரையில் உண்மையான பக்தி உண்டாவதில்லை.
* ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவன் ஆண்டவனை அறியமுடியாது. ஆன்மிகம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
* கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் தாயாக வணங்கிப் போற்றுபவனே உண்மைத்துறவி.
* இறைவன் நமக்கு அருகில் இருக்கிறான். ஆனால், நாம் தான் அவரை உணர முற்படுவதில்லை.
* உலகின் முதலாளியாக ஆண்டவன் இருக்கிறான். அவனுக்கு தொழிலாளியாக இருந்து பணிவிடை செய்வது தான் நம் வேலை. இதுதான் நாம் பிறந்த நோக்கமே.
* சித்துகள் புரியும் மனிதர்கள் இருக்கும் இடத்திற்குப் போகாதீர்கள். அவர்கள் பாதை தவறியவர்கள்.
* பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை மனதில் தங்கியிருந்தால் ஆன்மிகயோகம் கைகூடாது.
* விவேகமும், வைராக்கியமும் ஆன்மிக வளர்ச்சிக்கான அடிப்படைப் பண்புகள்.
* குடும்பவாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே இறைவனை சிந்திப்பவனே வீரபக்தன்.
* அகங்காரத்தை அடியோடு வேரறுத்து விடுங்கள். இறைவனைக் காணும் பேறு பெறுவீர்கள்.
* இறைவனே நமக்கு மிகவும் வேண்டியவர். அவர் நமக்கு அன்னியமானவர் அல்ல.
* இறைவனின் பூரணகருணை இல்லாவிட்டால் மனிதன் அறியாமையை வெற்றி கொள்ள முடியாது.
* தியாகம் செய்ய வேண்டுமானால் உலக ஆசைகளைத் தூக்கி எறியும் மனவலிமை வேண்டும்.
* இறைகாட்சி பெற்ற ஞானிக்கு காமம், கோபம் போன்ற தீயகுணங்கள் அற்றுப்போய்விடும்.
* உருவற்ற இறைவனை தியானிப்பது கடினம். அதனால் தான் கடவுளை உருவ வடிவில் வழிபடுகிறோம்.
* இறைவனிடம் பக்தி உண்டாகவேண்டும் என்று எப்போதும் பிரார்த்தனை செய்யுங்கள்.

 ராமகிருஷ்ணர்

No comments:

Post a Comment