Wednesday, June 19, 2013

ஓம் என்கின்ற மூல மந்திரத்தை எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும்?

இவ்வளவு நேரம்தான் ஒலிக்க வேண்டும்.
எழுத்துகளை உச்சரிக்கும் கால அளவை மாத்திரை என்று சொல்லுவார்கள். ஒரு நொடிப்பொழுது அல்லது இயல்பாக கண் இமைக்கும் நேரத்தை ஒரு மாத்திரை என்று இலக்கண நூல்கள் சொல்கின்றன.
ஓம் என்கின்ற மூல மந்திரத்தை எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. மூல மந்திரத்தை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் பெரியாழ்வார்.
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்எழ வாங்கு என்பது ஆழ்வார் வாக்கு. மந்திர சாஸ்திர நூல்கள் இம்மந்திரத்தை மூன்று மாத்திரை நேரம் அல்லது இரண்டரை மாத்திரை நேரம் ஒலிக்கலாம் என்று சொல்கின்றன.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. இரண்டரை மாத்திரை நேரம் ஒலித்தால் இவ்வுலக இன்பங்களை எளிமையாக, முழுமையாக பெறலாம். மூன்று மாத்திரை நேரம் ஒலித்தால் இறை ஞானம் விரைவில் கிட்டும்.

No comments:

Post a Comment