Wednesday, June 19, 2013

குடந்தையின் பெருமை !


தீர்த்த யாத்திரை தலங்களில் கும்பகோணத்திற்கு தனிப் பெருமை உண்டு . கோயில் இல்லாத ஊரில் வசிப்பவர்கள் அருகில் இருக்கும் கோயில் குளத்தில் நீராடினால் அவர்தம் பாவங்கள் போகும் . புண்ணிய க்ஷேத்திரத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் வாரணாசிக்கு சென்று நீராடினால் போகும் . வாரணாசியில் செய்த பாவங்கள் கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராட போகும் . கும்பகோண்த்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் எங்கே சென்று நீராடினால் போகும் ? இதற்கு ஒரு சுலோகம் விடை சொல்கிறது .
கும்பகோணத்தில் செய்த பாவங்கள் அங்கு உள்ள மக தீர்த்தத்தில் நீராடினால் விலகுமாம் .
" அன்னிய க்ஷேத்ரே க்ருதம் பாவம் புண்ணிய க்ஷேத்ரே விநச்யதிகி: புண்ணிய க்ஷேத்ரே க்ருதம் பாவம் வாரணஸ்யாம் விநச்யதிகி : வாரணஸ்யாம் க்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதிகு : கும்பகோணே க்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதிகி :' என்பது பவிஷ்யோத்ர புராணத்தில் உள்ள சுலோகம் ஆகும் .

No comments:

Post a Comment