Monday, April 6, 2015

இளைஞர்களிலும் திறமைசாலிகள் இருக்கிறார்கள்

இளைஞனான கரிகாற்சோழன் சோழநாட்டின் மன்னராகவும், நல்ல நிர்வாகியாகவும் திகழ்ந்தான். நீதி வழங்குவதில் அவனுக்கு நிகர் அவனே.
ஒருசமயம், இரண்டு முதியவர்கள் தங்கள் பிரச்னையைப் பேசித் தீர்க்க மன்னரின் உதவி நாடி வந்தனர். இளைஞனான கரிகாற்சோழனைக் கண்டதும் தங்கள் வழக்கினைத் தெரிவிக்காமல் மவுனம் காத்தனர்.
அனுபவசாலியால் மட்டுமே நல்ல தீர்ப்பு அளிக்க முடியும் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. அவர்களின் மனக் குறிப்பை அறிந்த கரிகாலன், ""பெரியவர்களே! நாளை அரசவைக்கு வாருங்கள்! அனுபவம் மிக்க முதியவர் ஒருவர் நடுவராக இருந்து உங்களுக்கு நீதி வழங்குவார்,'' என்று சொல்லி அனுப்பி வைத்தான். அடுத்த நாள் காலையில் அரசவையில் முதிர்ந்த ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். "இவரே சரியான தீர்ப்பு அளிப்பார்' என்ற நம்பிக்கையுடன் முதியவர்கள் பிரச்னையை எடுத்துக் கூறினர். தீர விசாரித்த முதியவர் இருவரும் ஏற்கும் விதத்தில் நல்ல தீர்ப்பு அளித்தார். பின் தன் நரைமுடி, தாடி வேஷத்தைக் கலைத்து, தானே கரிகாற்சோழன் என்ற உண்மையைக் கூறினான்.
இளைஞர்களிலும் திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தனர் முதியவர்கள்.

No comments:

Post a Comment