Monday, October 20, 2014

சரஸ்வதி குருநாதர் ஹயக்ரீவர்

கல்வித் தெய்வமாகத் திகழும் சரஸ்வதிக்கு ஒரு குருநாதர் உள்ளார். அவரிடம் மாணவியாக இருந்து உபதேசம் பெற்று உலகத்துக்கு சரஸ்வதி வழிகாட்டினாள். அந்த குருநாதர் ஹயக்ரீவர். இவர் கல்விக் கடவுள் என்றழைக்கப்படுகிறார்.

இவரைப் பற்றிய வரலாறு வருமாறு:- குதிரை முகத்தை உடைய ஓர் அசுரன் இருந்தான். `ஹயம்' என்றால் குதிரை என்று பொருள். எனவே, குதிரை முகன் என்ற பொருளில் அவனை ஹயக்ரீவன் என்றனர். அவன் தன்னைப் போன்ற உருவத்துடன் உள்ள ஹயக்ரீவனால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றிருந்தான்.

இதனால் திருமால் தானும் குதிரை முகம் உடைய ஹயக்ரீவராகத் தோன்றி அவ்வசுரனை வதைத்தார். பின்னர் உபதேச மூர்த்தியாகி அகத்தியருக்கு ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தை உபதேசித்தார். சரஸ்வதிக்கு குருநாதராகிப் பேராசானாகத் திகழ்ந்தார்.

No comments:

Post a Comment