Monday, October 20, 2014

சர்வமும் சக்தி மயம்

துர்க்கை சர்வ சக்தி மயமாக இருக்கின்றாள். சிவனிடம் சிவையாகவும், நாராயணரிடம் லட்சுமியாகவும், பிரம்மாவிடம் சரஸ்வதியாகவும், கிருஷ்ணரிடம் ராதையாகவும், சந்திரனிடம் ரோகிணியாகவும், இந்திரனிடம் இந்திராணியாகவும்,

காமனிடம் ரதியாகவும், வருணனிடம் வருணானியாகவும், வாயுவிடம் அவர் சக்தியாகவும், அக்னியிடம் ஸ்வாஹாவாகவும், குபேரனிடம் அவன் சக்தியாகவும், யமனிடம் சுசீலாவாகவும், நிருருதியாகவும் கோடவீயாகவும், ஈசானனிடம் சசிகலையாகவும், மனுவிடம் சதரூபையாகவும்,

கர்தமரிடம் தேவகதியாகவும், வசிஷ்டரிடம் லோபாமுத்ரையாகவும், கௌதமரிடம் அகல்யாகவும், எல்லாவற்றிற்கும் ஆதாரபூதமான பூமியாகவும், பல சிறந்த நதிகளாகவும், இந்த துர்க்கையே விளங்குகின்றாள்.

No comments:

Post a Comment