Monday, October 20, 2014

நவராத்திரியில் அம்மனின் 9 வித கோலம்

நவராத்திரி பண்டிகையின் முதல் நாள் மதுகடைபர் அழிவுக்கு காரணமான தேவியை குமாரி வடிவமாக வழிபட வேண்டும்.

இரண்டாம் நாள் மகிஷாசுரனின் சேனைகளை வதம் செய்ய புறப்பட்ட ராஜராஜேஸ்வரியாக துர்க்கையின் வடிவத்தை அலங்கரித்துப் பூஜிக்க வேண்டும்.

மூன்றாம் நாள் மகிஷாசுரனை வதைத்த அம்பிகையை சூலத்துடன் மகிஷன் தலை மீது நிற்கும் கோலத்தில் வழிபட வேண்டும்.

நான்காம் நாள் அம்பிகையின் வெற்றித் திருக்கோலமாக வழிபட வேண்டும்.

ஐந்தாம் நாள் அம்பிகை சும்பன் என்ற அசுரனின் தூதன் வந்து பேசுவதை கேட்கும் கோலத்தில் பூஜிக்க வேண்டும்.

ஆறாம் நாள் அன்று சர்ப்ப ராஜா ஆசனத்தில் ஸ்ரீ சண்டிகா தேவி அமர்ந்திருக்கும் கோலம் பூஜைக்குரியதாகும்.

ஏழாம் நாளில் சண்ட முண்டர்களை வதைத்த பின் பொன் பீடத்தில் அம்பிகை அமர்ந்து வீணை வாசிக்கும் கோலத்தில் பூஜைகள் செய்யப்பட வேண்டும்.

எட்டாம் நாளில் ரக்த பீஜன் வதமான பின் கருணை நிறைந்த தோற்றத்துடன் உள்ள அம்பிகையை பூஜிக்க வேண்டும்.

ஒன்பதாம் நாளில் வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியவைகளை தரித்த கோலத்தில் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.

பத்தாம் நாளன்று அம்பிகை லிங்கத்தைப் பூஜித்து சிவசக்தி ஐக்கிய ரூபிணியாக விளங்குகிறாள்.

எனவே அந்த கோலத்தில் அம்பிகையை வழிபடுதல் வேண்டும். நவராத்திரியில் கன்னிகை பூஜை, சுவாஸினி பூஜை, மிகவும் முக்கியம். ஒவ்வொரு நாளும் 2 வயதுப் பெண் குழந்தை முதல் முறையே பத்து வயது பெண் வரை ஒவ்வொன்றாகவோ அல்லது முதல் நாள் ஒன்று இரண்டாம் நாள் இரண்டு என்ற முறையாகவோ குமாரி பூஜை செய்ய வேண்டும்.

நாள்   வயது     பெயர்           பயன்
1        2        குமாரி           தொல்லைகள் நீங்கும்
2        3        திருமூர்த்தி      தனதான்ய வளம்
3        4        கல்யாணி        பகை ஒழித்தல்
4        5        ரோகிணி         கல்வி வளர்ச்சி
5        6        காளிகா           துன்பம் நீங்குதல்
6        7        சண்டிகா           செல்வ வளர்ச்சி
7        8        ஸாம்பவி          நலம் விரும்பி
8        9        துர்க்கா            பயம் நீக்குதல்
9        10       ஸீபத்ரா            உண்டாகுதல்  

/ இந்த முறையில் பூஜை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment