Wednesday, October 22, 2014

குபேரனை வழிபட சிறந்த நாள்

குபேரனை நாம் வழிபட்டால் அவருடைய அருள் கடாட்சம் நமக்குக் கிடைக்கும். குபேரன் எல்லா வளங்களையும் குறைவில்லாமல் தருபவர். பணவசதி தேக ஆரோக்கிய திடகாத்திரம் பெருகிட துணை புரிதல், கல்வி வளர்வதற்கான ஆயுதங்கள், வேலை வாய்ப்பு, வியாபாரப் பெருக்கம், தொழிற்துறை முதலியவை குபேரன் நமக்கு தரும் செல்வங்களாகும்.

இவர் பிறந்த நாள் வியாழக்கிழமை கூடிய பூச நட்சத்திரம். உரிய திசை வடக்கு. பிடித்த நைவேத்தியம் ஏலம், லவங்கம், கிராம்பு, வாசனைத் திரவியங்கள் கலந்த பால், கேசரி.

வியாழக்கிழமை அமைந்த பூச நட்சத்திரத்திலோ அல்லது வியாழக்கிழமையோ அல்லது பூச நட்சத்திரத்திலோ குபேரன் படம் ஒன்றைத் தயார் செய்து அதனுள் குபேரன் எந்திரம் ஒன்றை வைத்து பிரேம் செய்து அப்படத்தை குபேரத் திசையான வடதிசை நோக்கி வைத்து 48 நாட்கள் அதற்கான நைவேத்தியங்களைப் படைத்து வழிபட்டால் செல்வச் செழிப்பு நிச்சயம் உண்டாகும்

No comments:

Post a Comment