Wednesday, May 22, 2013

தவிர்க்க வேண்டிய சில.....


தவிர்க்க வேண்டிய சில.....

ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்க கூடாது.கொடுப்பவரும், வாங...்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும் . வாசற்படி,அம்மி,ஆட்டுக்கல் ,உரல் இவைகளில் உட்காரக்கூடாது . இரவு நேரங்களில் பால்,மோர்,தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது . வெற்றிலை வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது .வெற்றிலையை தரையில் வைக்க கூடாது . சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது . குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும் அணைக்ககூடாது .புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.எழவு என்றும் கூறக்கூடாது அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்ககூடாது . உப்பைத் தரையில் சிந்தக் கூடாது .

No comments:

Post a Comment