Wednesday, April 1, 2015

மனபயம் அறவே நீங்க பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.

மனபயம் அறவே நீங்க பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.
முதலில் மனபயம் எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டு மனரீதியாகவே அதைப் போக்க முயலுங்கள். நடப்பது எல்லாம் என்னால் தான், நான் தான் காரணம் என்பது போன்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். நடப்பது இறைவன் செயல். காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை என்ற நம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். சில விஷயங்களில் நம்மால் சாதிக்க முடியாதோ என்ற அச்சமும் வேண்டாம். இறைவன் அருளால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
""மஞ்சனே மணியும் ஆனாய் மரகதத் திறனும் ஆனாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே!
துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று
அஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே''
என்று திருநாவுக்கரசர் திருவாவடுதுறையில் பாடிய தேவாரப் பாடலை தினமும் பக்தியுடன் ஓதி வாருங்கள். பயம் நீங்கி துணிவுடன் செயலாற்றும் மனோபலம் விரைவில் உண்டாகும்.

No comments:

Post a Comment