Wednesday, April 1, 2015

எதையும் வீணாக்கக் கூடாது. மகரிஷி ரமணர்.

ஒருமுறை அன்பர் ஒருவர் ரமணாச்ரமத்தில் கத்திக்காய் நறுக்கிக் கொண்டிருந்தார். சதைப்பகுதியைச் சமையலிலும், காம்புப் பகுதியைக் குப்பையிலும் போட்டு வந்தார்.
இதைக் கவனித்த மகரிஷி, “ஓய், காம்புப் பகுதிகளை ஏன் வீணாக்குகிறீர்?” என்று கேட்டார்.
“சுவாமி, அது சமையலுக்கு ஏற்றதல்ல” என்றார் அன்பர். “ யார் சொன்னது? அந்த வெட்டின காம்புகளை எல்லாம் என்னிடம் கொடுங்கள்” என்று வாங்கிக் கொண்ட பகவான், அதைக் கொண்டு சுவையான ஒரு கறியைச் சமைத்தார்.
கத்திரிக்காயில் சுவையானது அந்தக் காம்புப் பகுதி தான் என்பதை அந்த அன்பருக்குப் புரியவைத்தார்.
பிறகு மகரிஷி அவரிடம், “எதையும் வீணாக்கக் கூடாது. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒரு தூசியைக் கூட நாம் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம், இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் ஒரு தூசியாகத் தூக்கிப் போட்டுப் போகவும் தெரிந்திருக்க வேண்டும்.” என்றார்.
ஆஹா! கத்திரிக்காயில் எத்தனை பெரிய தத்துவத்தை எளிதாக புரிய வைத்தார் மகரிஷி ரமணர்.

No comments:

Post a Comment