Wednesday, April 1, 2015

எல்லாம் உயிர்கள் தானே. ஆனால், பசுவிற்கு மட்டும் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறுவது ஏன்?

எல்லாம் உயிர்கள் தானே. ஆனால், பசுவிற்கு மட்டும் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறுவது ஏன்?
பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமியம் (சிறுநீர்) ஐந்தும் சேர்ந்தது பஞ்ச கவ்யம். இதைக்கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் போது வெளிப்படும் ஒளிக் கதிர்கள் நம் உடல், மனநோயைப் போக்க வல்லது என ஞானிகள் அறிந்தனர். சித்தர்கள் இவற்றைக் கொண்டு "பஞ்ச கவ்ய கிருதம்' என்னும் மருந்தை தயாரித்தனர். இப்போது தயாரித்துள்ள உரத்துக்கு கூட "பஞ்சகவ்யா' எனப் பெயரிட்டுள்ளனர். பசுவின் தெய்வீக சக்தியை உணர்ந்தே சாஸ்திரங்கள் அதை வழிபடச் சொல்கின்றன. 33 கோடி தேவர்களும் அதன் உடலில் இருக்கின்றனர். அதன் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

No comments:

Post a Comment