Sunday, April 5, 2015

மணப்பெண் வலதுகாலை முன் வைத்து செல்வது ஏன்?


மணப்பெண் வலதுகாலை முன் வைத்து செல்வது ஏன்?
download
மனிதனின் உடல் வலம் இடம் என இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.  வலது பக்கத்தில் அமைந்துள்ள கண் காது மூக்கு புஜம் கை துடை கால் ஆகிய உறுப்புக்களுக்கு உடலில் இடப் பக்கத்தில் அமைந்துள்ள உறுப்புக்களைக் காட்டிலும் சற்று பலமும் வலிமையும் புண்ணீயமும் அதிகமாக இருக்கும் என்கிறது வேதம். இதை இன்றைய விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகிறது.
அதாவது நம் உடலைச் சுற்றிலும் இரு வேறு காந்த வளையங்கள் உள்ளன. அவற்றில் முதலாவது கால் பகுதியிலிருந்து தலைப்பகுதிக்கும்  தலைப் பகுதியிலிருந்து கால் பகுதிக்கும் வலமாகச் சுற்றுகிறது.  இரண்டாம் காந்த வளையம் உடலின் இடது பாகத்திலிருந்து உடலில் முன் பகுதி வழியாக வலது பக்கத்துக்கும் வலப்பகுதியிலிருந்து பின்பகுதி வழியாக இடது பக்கத்துக்கும் வலமாக சுற்றுகிறது.
ஆகவே காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும்போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும்போது சுருள் தொய்ந்துபோய் உடல் இயந்திரத்தின் செயல்திறன் தளர்வடையச் செய்கிறது.  ஆகவே உடலின் இடப்பகுதியை காட்டிலும் வலப்பகுதிக்கு செயல்திறன் அதிகம் என்கிறது  நவீன மின் இயல்
இதை ஒட்டியே நமது மகரிஷிகளும் எந்த  நல்ல செயலைச் செய்யும்போதும் வலது பகுதியிலுள்ள வலக்கை போன்றவற்றால் செய்ய வேண்டும் என சொன்னார்கள். புத்தம் புதிதாக வீடு கட்டி அந்த வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் நடத்தும்போது அந்த வீட்டுக்கு தலைவியான குடும்பப் பெண் வீட்டுக்குள் நுழையும்போது தனது வலதுகாலை வைத்து நுழைய வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இவ்வாறே திருமணம் முடிந்து முதல் முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழையும் மணப்பெண்ணும் நுழையும்போது முதலில் தனது  வலது காலை வீட்டுக்குள் வைத்து நுழைய வேண்டும். இதனால் அந்த வீட்டில் அந்தப் பெண்ணீன் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும்.


No comments:

Post a Comment