Thursday, August 27, 2015

துன்பத்தை ஏற்க முடியாமல் மனம் சஞ்சலப்படுகிறது. எப்படி தேற்றுவது?

துன்பத்தை ஏற்க முடியாமல் மனம் சஞ்சலப்படுகிறது. எப்படி தேற்றுவது? 
இன்பம் என்றால் மகிழ்வதும், துன்பம் என்றால் வருந்துவதும் மனதின் இயல்பு. கவலைப்படுவதால் துன்பம் தீவிரமடையுமே ஒழிய தீர்வுக்கு வழி கிடைக்காது. "உங்களுக்கும் கீழே உள்ளவர் கோடி' என்ற உண்மையை உணருங்கள். கணவர் இல்லாமலும், சிறுவயதில் குழந்தைகளைப் பறி கொடுத்தவர்களாகவும் எத்தனையோ பேர் தன்னம்பிக்கையோடு பூமியில் வாழ்கிறார்கள். தன்னம்பிக்கை மிக்கவர்களிடம் பேசுங்கள். நல்ல நூல்களைப் படியுங்கள். திங்கட்கிழமை அல்லது பவுர்ணமியன்று நவக்கிரக மண்டபத்திலுள்ள சந்திரனை வணங்குங்கள். ஏதோ ஒரு மலைக்கோயிலுக்கு கிரிவலம் போய் வாருங்கள். மனபலம் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment