Wednesday, March 25, 2015

மனிதன் கொண்டுள்ள மூன்று உடல்கள்!

வ்வொறு மனிதரும் மூன்று அடிப்படை உடல்களால் ஆளுமை செய்யப்படுகின்றனர் – முதலாவது “ஸ்தூல சரீரம்” அல்லது ‘மொத்த உடல்’, இது பூமியின் ஒரு விரிவாக்கம் தான்; முதலில் தாயின் மார்பகத்தால் பேணிக்காக்கப்பட்டது, தற்பொழுது பூமித்தாயின் மார்பகத்தால் பேணிக்காக்கபடுகின்றது. அதனுடைய வாழ்வாதாரம் பூமிதான், அதனுடைய தன்மையும் பூமிதான், அதனுடைய மூலம் பூமி, அது போய் சேருமிடமும் பூமிதான். இந்த மூன்று அடிப்படை உடல்களிலும், எது ஒரு மனிதரின் வாழ்க்கையில் தலையாயதாய் இருக்கிறதோ, அதுவே அவர் எந்த திசையை நோக்கிச் செல்கிறார் என்பதைத் தீர்மானிக்கின்றது. இரண்டாவது உடல் யோக கலாசாரத்தில், ‘லிங்க சரீரம்’ என்றழைக்கப்படுகின்றது. இது பாலியல் உடல், இரண்டு மரபு வழிகளின் கலவையான உணர்வுகளின் வெளிப்பாடு. தாயும் தந்தையும், ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றுபடுவதால், ஒரு குழந்தை பிறக்கின்றது; இந்த இருவரின் பதிவுகள் மட்டுமல்ல, அவர்களுடைய மூதாதயர்களின் உணர்வுப் பதிவுகளும் இந்த பாலியல் உடலில் சேகரிக்கப்படுகிறது. ‘லிங்க சரீரத்தை, ஆங்கிலத்தில் ‘ஜெனடிக் பாடி’ – அதாவது மரபுவழி உடல் என்று சொல்வார்கள். இது நம்மை பல வழிகளில் ஆளுமை செய்கிறது. பெரும்பாலான மனிதர்கள், இந்த இரண்டின் செயல்பாடுகள் மூலமாகத்தான் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள், அதாவது – பூமி உடல் மற்றும் மரபுவழி உடல். மூன்றாவது பரிமாணத்தில் உள்ள உடல் ‘சூட்சும சரீரம்’ அல்லது ‘ஆகாஷிக்’ என்று அழைக்கப்படுகிறது – இது ஒரு விழிப்புணர்வுடன் கூடிய சக்தி. இதில் ஒவ்வொரு தனிமனிதனின் அனுபவம் பல்வகைப்பட்டக் கோணங்களில் இருப்பதால், அவன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் ஒரு நடிகனாகவும், ஒரு பார்வையாளனாகவும் இருக்கிறான். உடலின் மூன்றாவது பரிமாணம் இந்த வாய்ப்பை அளிக்கின்றது; அதனால் இதனை ‘விழிப்புணர்வு உடல்’ என்று நாம் சொல்லலாம். தற்பொழுது இந்த மூன்று அடிப்படை உடல்களிலும், எது ஒரு மனிதரின் வாழ்க்கையில் தலையாயதாய் இருக்கிறதோ, அதுவே அவர் எந்த திசையை நோக்கிச் செல்கிறார் என்பதைத் தீர்மானிக்கின்றது. அவர் தன்னுடைய ‘ஸ்தூல சரீரம்’ அல்லது பூமி உடல் மூலமாக ஒரு சுழற்சியில் செல்கிறாரா, அல்லது தன்னுடைய ‘லிங்க சரீரம்’ அல்லது மரபுவழி உடல் மூலமாகப் பின்நோக்கிச் செல்கிறாரா அல்லது தன்னுடைய ‘சூட்சும சரீரம்’ அல்லது விழிப்புணர்வு உடல் மூலமாக எல்லவற்றையும் கடந்து, விடுதலையை நோக்கிச் செல்கிறாரா? எது அவருடன் விளையாடுகிறது என்பதை, அவர் சற்று பார்க்க வேண்டும். ஸ்தூல உடல் இந்த மூன்று உடல்களுமே, நீங்கள் ‘நான்’ என்று குறிப்பிடுவதை எல்லாம் உருவாக்குகின்றது. இந்த ‘ஸ்தூல உடல்’ என்பது இந்த உலகில் உள்ள மற்ற எல்லா வடிவங்களைப் போன்றது; இது ஒரு பொம்மை, ஒரு விளையாட்டுப் பொருள். இந்த உடல், மற்ற உடல்களான பாலியல் அல்லது மரபுவழி உடல், மற்றும் சூட்சும அல்லது ஆகாஷிக் உடல், இவைகளில் ஊறி, ஒன்றின் மேலொன்றாக இருந்தால்தான், இந்த பூமி உடலானது உண்மையானது போல் தோற்றமளிக்கும். இதுதான் இறப்பின் அழகு, விளையாட்டு பொருளில் பாட்டரி தீர்ந்து விட்டது; பாட்டரி இல்லாவிட்டால் அந்த பொருள் பூமியின் ஒரு சிறு துண்டுதான். இந்த பூமியின் தயாரிப்பானது, கனவு கண்டால், பூமியிலிருந்து எடுப்பதை தான் கனவு காண முடியும், அதாவது – உணவு மற்றும் பாலுணர்வு. தனக்கு தெரியாமலேயே அது இறப்பைத் தேடுகிறது ஏனென்றால் அதன் தன்மையே சுழற்சிகளில் போவதும், விழிப்புணர்வு இல்லாதிருத்தலும் தான். நீங்கள், பலவிதமான பையித்தியக்காரத்தனமான ஆசைகளிலும், குறிகோள்களிலும் ஊறிபோகாவிட்டால், நீங்கள் இந்த உடலின் அடிப்படை தன்மையை நோக்கிப் போய்விட்டல், நன்றாக உண்பது, உறங்குவது, இனப்பெருக்குவதிலேயே வாழ்க்கைப் போய்விடும், ஏனென்றால் அது தான் உடலின் அடிப்படை தன்மை, பூமியை நோக்கிப் போவதுதான். அது எவ்வளவு வேகமாக அங்கே போகிறது என்பதுதான் கேள்வி. லிங்க சரீரம் இந்த இரண்டாவது பரிமாணம், பாலியல் உடல் அல்லது லிங்க சரீரம், பலவிதமான நோக்குகளை உங்களுக்குத் உங்களுடைய ஆகாஷிக் உடல் கனவு கண்டால், அது படைத்தலை உருவாக்குவது போல் ஆகும்; அது நிச்சயமாக நிறைவேறும். தருகிறது. நீங்கள் அதை உங்களுடையது என்று நினைக்கிறீர்கள், ஆனால் இது வெறும் கடந்தகாலத்திலிருந்த உங்களுடைய இறந்து போன முன்னோர்கள் உங்கள் மூலமாக விளையாடுகிறார்கள், அவ்வளவுதான். இந்த லிங்க சரீரம் மற்றவருக்குச் செலுத்தக்கூடியது. ஒரு மனிதர் குழந்தை வேண்டுவதும், தான் இறந்தப் பிறகும் விளையாட வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான். வேறு எந்தக் காரணமும் கிடையாது. உங்களுடையதான ஏதோ ஒன்று நீங்கள் இறந்தப் பிறகும் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். இந்த லிங்க சரீரம் கனவு காணும் போது, இவ்வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாதவற்றை தான் காணும். இந்த பாலியல் உடல் அல்லது மரபுவழி உடலானது மிகவும் சிக்கலான ஒன்று. பெரும்பாலான கனவுகள் இதனால் தான் நடக்கும். நீங்கள் உணவையும், பாலியலையும் பற்றி கனவு கண்டிருந்தால், ஒரு சிறு துளி யோகப்பயிற்சியின் மூலம் – காலை நான்கு மணிக்கு எழுந்து ஒன்றிரண்டு மணிநேரம் சாதனா செய்தால், இந்த கனவுகள் எல்லாம் கலைந்து விடும், ஏனென்றால், இந்தப் பருப்பொருள் அல்லது ஸ்தூல உடலை, வெகு சுலபமாக பயிற்சிக் கொடுத்து மாற்றி விடலாம். ஆனால் உங்கள் மூதாதையர்கள் என்பது வேறு விஷயம்; ஏனென்றால் 1,25,000 தலைமுறை மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள் என்கின்றனர், அவர்கள் எல்லோரும் நம் மூலமாகத்தான் விளையாட விரும்புவார்கள். ஆகாஷிக் உடல் உங்களுடைய ஆகாஷிக் உடல் கனவு கண்டால், அது படைத்தலை உருவாக்குவது போல் ஆகும்; அது நிச்சயமாக நிறைவேறும். ஆனால் வெகு சிலருக்கே இந்த அனுபவம் கிடைக்கும். ஆகாஷிக் உடல் கனவு கண்டால், அது மற்றவர்கள் பாராததை பார்ப்பது போல் ஆகும் – ஒரு சூட்சுமமான படைப்பின் வழிமுறையானது நடக்கத் துவங்கியிருக்கிறது. அது உண்மையாக நடந்தேரும், ஏனென்றால், ஏற்கனவே அது நடக்க ஆரம்பித்துவிட்டது. எங்கோ 80’களில் என்று நினைக்கிறேன், UK ல் உள்ள பரிசோதனைக்கூடம் ஒன்றில், பிரம்மாண்டமான உணர்திறன் வாய்ந்த படச்சுருள் (ஃபோட்டோ ஃபிலிம்) ஒன்றை தயாரித்தார்கள். அவர்கள் அதனை பரிசோதனை செய்வதற்காக, ஒரு தோட்டத்திற்குச் சென்றார்கள். அவர்கள் ஒரு ரோஜா மொட்டைப் பார்த்து அதை படம் பிடித்தார்கள், ஆனால் அவர்கள் அதை கழுவி, அச்சடித்துப் பார்த்தால், ரோஜா மொட்டு இருக்கவில்லை, மாறாக ஒரு முழுவதும் மலர்ந்த மலர் இருந்தது. அவர்களால் அதை நம்ப முடியவில்லை! அதனால், அவர்கள் அங்கே போய், அதைத் திரும்ப, திரும்பப் படமெடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொரு தடவை அந்த ரோஜா மொட்டை படமெடுத்தபோதும், அந்தப் புகைப்படத்தில் அவர்கள் ஒரு முழுவதும் மலர்ந்த ரோஜாவைத் தான் கண்டார்கள். இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த மலர் மலர்ந்த போது, அது அவர்கள் எடுத்தப் புகைப்படத்தை போலவே இருந்தது. நீங்கள் இந்த இரண்டுக் கண்களையும் ஒரு கேமெரா போல் நடத்தினால், அங்கு நடப்பவையெல்லாம் நீங்கள் பார்க்கத் தவறிவிடுவீர்கள். சமீபத்தில் ஒரு விஞ்ஞானி, தான் வெளியிட்டப் புத்தகத்தில், மனிதக் கண்களுக்கு, இந்தப் பருப்பொருள் பிரபஞ்சத்தில் எந்த அளவுக்குத் தெரியும் என்பது பற்றி கூறியிருக்கிறார். அவர், 0.00001 சதவிகிதம் அளவுதான் இந்த மனிதக் கண்களுக்கு, இந்தப் பருப்பொருள் பிரபஞ்சத்தில் பார்க்க முடியும் என்று கூறியிருக்கிறார். இதை மட்டும் வைத்துக்கொண்டு, நாம் இந்த வாழ்க்கையைப் பற்றியும், படைப்பைப் பற்றியும், பலவிதமான அழகான முடிவுகளுக்கு வந்திருக்கிறோம். தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, இன்னும் ஒரு எட்டு பூஜ்ஜியங்களை சேர்க்க வேண்டும், ஏனென்றால், அவர்களால் மற்றவர்கள் பார்ப்பதைக் கூட பார்க்க முடிவதில்லை. அதனால், நீங்கள் இந்த இரண்டுக் கண்களாலும் படமெடுத்தால், எது இருக்கிறதோ அதைத் தான் பார்ப்பீர்கள். நீங்கள், பழமொழியிலுள்ள மூன்றாவது கண்ணை வைத்துப் படமெடுத்தால், எது இனிமேல் நடக்குமோ, எது நடக்கக்கூடுமோ, அதைப் பார்ப்பீர்கள். நீங்கள் விதையை, மரமாகவும், பூவாகவும், பழமாகவும் பார்ப்பீர்கள்.

 மனிதன் கொண்டுள்ள மூன்று உடல்கள்! 

No comments:

Post a Comment