Monday, March 23, 2015

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:?

குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:?
இதில் நம்பத்தகுந்த சுவாரசியமான ஓர் விஷயம் அடங்கி இருக்கிறது. நம் சூழ்நிலைகள் உள்ளன. அவை நன்மை தீமை ஆகிய ஸ்ரீதேவியும் மூதேவியும் ஆகிய இரண்டும். நாம் தலையில் நீரூற்றும் போது ஸ்ரீதேவியும் மூதேவியும் உடலை விட்டு வெளியேறுகின்றனர். பின் அவை போராட்டம் நடத்தி கொண்டு இருக்கும், முதலில் யார் நமக்குள் நுழைவது என்று. உடலில் எந்த பாகம் முதலில் ஈரம் துடைத்து சுத்தம் ஆகின்றதோ அப்பாகத்திம் மூதேவி முதலில் நுழைந்து விடுவது வழக்கம் ஏனென்றால் இப்போராட்டத்தில் முதலில் வெற்றி பெறுவது தீமையான மூதேவியே.
இரண்டாவது முகம் துடைத்தால் அங்கு சீதேவி புகுந்து நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள் முழுவதும் கழிக்க வேண்டியது தான். அதாவது அன்றைய நாள் அம்போ! அதனால் முதலில் முதுகை துடைத்த பின் முகம் துடைக்க வேண்டும் என்ற போதனை பின் தலை முறைகளிற்கு அளித்துள்ளனர் முன்னோர்கள்.
இதை கேட்டதும் முற்றிலும் மூட நம்பிக்கை என்று புறம் தள்ளி விட வேண்டாம், இதன் பின் ஒரு அறிவியல் உண்மை அடங்கி இருக்கிறது.
குளிக்கும் போது நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகிறது மிக அதிகமாக குளிர் அனுப்பபடுவது முதுகில் ஆகும். முதுகெலும்பில் அதிக நேரம் குளிர் ஏற்க்க வேண்டி வந்தால் நோய்வாய்ப்பட வாய்புகள் உண்டு. இதனால் குளித்த உடன் முகத்தை துடைக்க வேண்டும் என்ற விதி முறை வகுத்து உள்ளனர்.
ஆனால் ஒரு வாளி குழாய்த்தண்ணீரில் குளிப்பவர்களிற்கு இந்த சாஸ்திரம் பொருந்தாது.
பிரம்மா முகூர்த்தத்தில் எழுந்து குளிமையான நதியிலோ குளத்திலோ மூழ்கி குளிப்பவர்களுக்காக எழுதப்பட்ட விதி இது

No comments:

Post a Comment