Tuesday, March 17, 2015

உப்பும் .......தேனும் ......நோயும் .....!!!!!

உப்பும் .......தேனும் ......நோயும் .....!!!!!
---------------------------------------------------------------
உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என்
பாட்டி சொல்வார்கள் .உப்பு நமக்கு உணவுகளில்
சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும்
நமக்கு தெரிந்த விவரம்.
சித்தர்கள் உப்பை பற்றி என்ன
சொல்லி உள்ளார்கள் ?
இறந்தவைகளை பாதுகாக்க
பயன்படுவது உப்பு. உப்பு மனிதன் குருதியில்
கலந்தவுடன் மிருக குணம் வந்துவிடும்,
இது இறை நிலைக்கு எதிர் மறையான
பலனை உடையது. இறைவனுக்கு படைக்கும்
எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்,
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள்.
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும்
என்றால் உப்பை கலந்து வைத்தால்
அவை அப்படியே இருக்கும்.
உப்பு மனிதர்களுக்கு நிறைய
நோய்களை கொடுக்கும்.
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல்
உணவு உண்ண பத்தியம் உண்டு, கை தேர்ந்த
வைத்தியர்கள் இதை அறிவார்கள்.
தேன்.:
தேன்இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும்
தெரியும். சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்
தெரியுமா ?
தேன் தன்னுடன் சேரும்
பொருளை கெடுக்காது தானும் கெடாது. தேன்
நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால்
தொண்டை வழியே உள்ளே சென்றவுடன்
இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது .
இதனால் தான்
தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் .
மேலும் தேன் உயிர் சக்திகளை தரும்
பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில்
ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம்
கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர்
சக்தி அப்படியே இருக்கும் .இதனால் சித்த
மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம்
தருவார்கள்.
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ
1.மாதம் 2 முறையாவது 3 வேலையும்
உப்பு இல்லாமல் உண்ண
பழகி கொள்ளவேண்டும் .
2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .
3.தேனுடன் பால் கலந்து சாப்பிட
சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .
உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ
உணவுகள்) இவைகளை நாம்
தின்று (உப்பினால் ) வரும்
நோய்களை குணபடுத்த
உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது.
இன்றைய மருத்துவம் (alaopathy )
இனிப்பை வைத்து வைத்தியம்
செய்வது homeopathi .
உப்பும், தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும்
கெடுக்காது.
நல்ல தேனை எறும்பு தீண்டாது, உப்பையும்
எறும்பு தீண்டாது.
கருவாடு ,உறுகாய்,போன்றவைகள் உதாரணம்.
நம் சமயத்தில் தேவ அசுர
சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும்
நடக்கும் சண்டையே.
தேவ அமிர்தம் என்பது தேன் ...
தேன் தேவகுணம் உடையது
உப்பு அசுரகுணம் உடையது
தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில்
அழைத்து செல்லும். உப்பு புலோகத்தில்
இருக்க வைக்கும்.
ஆகவே உப்பை குறைத்தும், தேனை சேர்த்தும்
சாப்பிட்டு பழகி கொள்வோம்.

No comments:

Post a Comment