Tuesday, March 24, 2015

எட்டு காலங்கள் ......

எட்டு காலங்கள் ......
விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம்.
அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை தேவர்கள் காலம்.
முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை ரிஷிகளின் காலம்.
நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பிதுர்க்களின் காலம்.
பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை சந்தியா காலம்.
முன் இரவு 6 மணி முதல் 9 வரை பூத காலம். நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை பிரேத காலம்.
பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை ராக்ஷச காலம்
இதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் யாவற்று சுபகாரியங்களும் திதி,நக்ஷத்ரம் ,சரியில்லாவிட்டாலும் செய்யலாம்.
உதய காலம் தேவர்களுடையதால் வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.
ரிஷிகளின் காலத்தில் நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை,திதி, நக்ஷத்ரம் , வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.
பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும் , நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.
சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும்,ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.
நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது , நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ , முடிக்கவோ கூடாது.

No comments:

Post a Comment