Thursday, March 19, 2015

திருநீறு ஏன் ?


திருநீறு ஏன் ?
மாற்றங்களைக் கடந்தவர் கடவுள் . ''' மாற்றம் மனம் கழிய நின்ற மறையவன் ''' என்பது திருவாசகம் . பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது , அழியாதது , சாஸ்வதமானது என்று தத்துவ நூல்கள் சொல்லுகின்றன . நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும் . பஞ்சையோ , கட்டையையோ இட்டால் அது சாம்பலாகும் . ஆனால் , நெருப்பில் சாம்பலைப் போட்டால் என்னவாகும் ? அது சாம்பலாகவே
இருக்கும் . எந்த மாற்றமும் அடையாது .
இப்படி மாறாமல் இருக்கும் பிரம்ம தத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறோம் . கண்ணில் படுவதுதான் மனதில் நிலைத்து நிற்கும் .கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மறைந்துவிடும் . பிரம்மம் பற்றிய நினைப்பு எப்போழுதும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் அணிகிறோம் !

No comments:

Post a Comment