Friday, March 27, 2015

உள்ளத்தில் இறைவனை பாருங்கள்

நமது ஐம்புலன்கள் வழியாக வரும் இன்பம் முடிவில் சிக்கல்களாகவும், நோய்களாகவும், நெருக்கடிகளாகவும் மாறி நம்மை சேதப்படுத்தி விடும். இதனால் ஐம்புலன்களின் கதவை மூடிக் கொண்டு உள்ளத்தில் இறைவனை பார்க்க பழகிக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

இதனால் அமைதியும், ஆனந்தமும் நமக்கு கிடைக்கும் சிவன் என்பவர் இறைவன், இறைவனுக்கு ஆறு குணங்களை உடையவர் என்று பொருள் உண்டு. இறைவனாகிய பகவானை உள்ளத்தில் வைத்து அடிக்கடி பூஜிப்பவர்களுக்கு அவரின் ஆறு குணங்களாகிய ஞானம், ஐஸ்வர்யம், சக்தி, பலம், வீரியம், தேஜஸ் என்பன சேர்ந்துவிடும்.

கல்வி, தொழில் இவற்றில் வெற்றி பெறவும், பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் பலர் இறைவன் மேல் பக்தி செலுத்துகிறார்கள். அதே நேரத்தில் சிலர் ஞானம் பெறவும், மறுமையில் உயர்வு பெறவும், மூல மந்திரம் கூறி பகவான் மேல் பக்தி செலுத்துகின்றனர். பகவான் மேல் பக்தி செலுத்துவதாலும், மந்திரம் கூறி இறைவனை அடிக்கடி நினைப்பதாலும் எடுத்த காரியம் கைகூடி விடும்.

மன வலிமையும் இறை நினைப்பும் உடையவர் நல்ல சந்தர்ப்பத்தை உண்டு பண்ணுகிறார். மந்திரம் கூறி தொடங்கும் வேலை வெற்றியாகும். அத்துடன் தொடர்ந்து மந்திரம் கூறி வந்தால் பிரச்சினைகள் நீங்கும் அற்புதங்கள் நடக்கும். எனவே மந்திரம் சொல்வதை மறவாதீர்கள். குடும்பத்தில் இருந்து கொண்டே ஞானம் பெற முயற்சிப்பவர்களுக்கு இந்து மதம் அருள்பாலிக்கிறது.

கல்வியில் உயர்வு, தொழிலில் விருத்தி, உலகியல் வாழ்வில் முன்னேற்றம் பெற தொடர்ந்த இறை நினைப்போடு மானசீக பூஜை செய்ய வேண்டும். அத்துடன் மந்திரம் கூறி பிரார்த்தனை செய்து பகவானை வழிபடுபவர்களுக்கு இந்து மதம் அருளும் பொருளும் பெற வழி காட்டியுள்ளது. அந்த நல்ல வழியை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment