Friday, March 27, 2015

மார்கழி நீராடலின் மகத்துவம்

பனி விழும் மாதம் மார்கழி. இம்மாதத்தில் ஆண்கள் அதிகாலையில் எழுந்து ஆறு, குளத்திற்கு சென்று நீராடிவிட்டு பகவானின் நாமத்தை கூறிக்கொண்டும், திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடிக்கொண்டு வீதிகளில் செல்வார்கள்.

கோவிலுக்கு சென்றும் வழிபடுவர். அந்த நேரத்தில் பெண்கள் வெளியில் செல்ல முடியாததால், வீட்டில் குளித்துவிட்டு வீட்டின் வாசலை தெளித்து பெருக்கி, பெரியகோலங்கள் போடுவார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் ஓசோன் வாயு கீழே வெளிப்படுகிறது. அது வியாதிகளை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.

அந்த நேரத்தில் ஓசோன் நம் மீது பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதனால் தான் மார்கழி மாதத்தில் பொழுது விடியும் நேரத்தில் நீராடி நோன்பு நோற்கும் முறை உருவானது.

‘மார்கழி திங்கள், மதிநிறைந்த நன்னாள், நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என்று திருப்பாவை பாடிய ஆண்டாள், விடியற்காலையில் அனைவரையும் அழைத்து பாவை நோன்பு கடைப்பிடிக்க வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment