Friday, March 27, 2015

வசிஷ்டர் பற்றி அறிவோமா?

வேத காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் மாமுனிவர்களுள் ஒருவரான வசிஷ்டர், சப்தரிஷிகளிலும் ஒருவராக திகழ்கிறார். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக் கொண்ட பல சுலோகங்கள் உள்ளது.

இவர் பெயரால் வழங்கும் நூல் 'வசிட்ட சம்கிதை' என்பதாகும். இவரது மனைவி அருந்ததி. தேவலோகப் பசுக்களான காமதேனு, நந்தினி ஆகியவற்றை பராமரித்து வந்தவர். மன்னர் கவுசிகர் இந்த பசுக்களை பறிக்க முயன்றும், அதில் தோற்று பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் பிரம்ம ரிஷி விசுவாமித்ரர் என்று பெயர் பெற்றார்.

வசிஷ்டர் பிரம்மாவின் புத்திரர்களுள் ஒருவர். வசிஷ்டரின் பிள்ளைகளில் ஏழு பேர், 3-வது மன்வந்திரத்தில் சப்தரிஷிகளாக இருந்தவர்கள். நிமியின் சாபத்தினால் வசிஷ்டர் தேகம் இழந்தார். பின் ஊர்வசியிடம் தோன்றினார்.

இப்பிறவியின் பின் அவர் சூர்யகுல மன்னர்களுக்கு குலகுரு ஆனார். வசிஷ்டருடன் பிறந்தவர் அகத்தியர். தேவர்களின் பொருட்டு தம் நேத்ர அக்னியால் அசுரரை எரித்தவர்.

No comments:

Post a Comment