Thursday, March 12, 2015

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்


பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்:::::
அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல். (சாப்பிடு தமிழ் வார்த்தை அல்ல)
துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல். (நுங்கு சாபிட்டவர்களுக்கு இது புரியும்)
பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

No comments:

Post a Comment