Friday, March 27, 2015

சிதம்பர ரகசியம்

சிதம்பரம் என்றாலே ரகசியம் என்ற வார்த்தையும் உடன் சேர்ந்து கொள்கிறது. பேச்சு வழக்காகிப்போன இந்த ரகசியத்தின் அர்த்தம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திருவாரூரில் மண்ணாக, திருவண்ணாமலையில் நெருப்பாக, திருவானைக்காவலில் நீராக, திருக்காளத்தியில் காற்றாக வழிபடப்படும் இறைவனை சிதம்பரத்தில் ஆகாய உருவில் வழிபடுவதுதான் அந்த ரகசியம்.

ஆலயத்தின் சித்சபையில் ஸ்ரீநடராஜபெருமான் நடன கோலத்தில் காட்சி தருகிறார். வலது பக்கம் திரைபோடப்பட்ட நிலையில் சிறுவாயில் உள்ளது. நடராஜருக்கு ஆரத்தி காட்டப் பெறும் போது அந்தத்திரை அகற்றப்படும். அப்போது அந்த இடத்தில் திருவுருவம் எதுவும் தெரியாமல் தங்கத்தினால் ஆன வில்வதளமாலை ஒன்று தொங்க விடப்பட்ட நிலையில் தெரியும்.

இதற்கு அர்த்தம் அங்கு இறைவன் அருவ வடிவில் (ஆகாய உருவில், உள்ளார் என்பது தான். இது தான் சிதம்பர ரகசியம்

No comments:

Post a Comment