Tuesday, March 17, 2015

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் மதசுதந்திரமே

அவை:
1.கடவுள் இல்லை என்று சொன்னாலும்
குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2.இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கு
கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று
வரையறுக்காத மதம்.
3.காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக
வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4.இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத
மதம்.
5.மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும்
என்று வரையறை செய்யாத மதம்.
6.ஒட்டு மத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத் அத்தலைவர் என்று
யாரும் இல்லை.
7.தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும்
முகத்தில் காரி உமிழும் தெளிவு
இந்துகளுக்கு.
8.இயற்கையை தோன்றியவற்றில் இழி பிறவி
என்று ஏதுமில்லை.மரமும் கடவுள் ,கல்லும்
கடவுள் ,நீரும் கடவுள்(கங்கை),காற்றும்
கடவுள் (வாயு),குரங்கும் கடவுள்
அனுமன்,நாயும் கடவுள் ,பன்றியும் கடவுள்
(வராகம் ).
9.நீயும் கடவுள்.நானும் கடவுள் ...பார்க்கும்
ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
10.எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும்
மதம்.பன்னிரு திருமுறைகள் ,மண் ஆசையை
ஒழிக்க இராமாயணம் ,பொன் ஆசையை ஒழிக்க
மகா பாரதம் ,கடமையின் முக்கியத்துவத்த
ை உணர்த்தும் பாகவதம் ,அரசியலுக்கு அர்த்த
சாஸ்த்திரம் ,தாம்பத்தியத்திற்கு கம
சாஸ்திரம்,மருத்துவத்திற்கு சித்தா
,ஆயுர்வேதம்,கல்விக்கு வேதக் கணிதம் ,உடல்
நன்மைக்கு யோகா சாஸ்த்திரம்
,கட்டுமானத்திற்கு வாஸ்து சாஸ்திரம்,விண்ண
ியலுக்கு கொள் கணிதம்.
11.வாளால் பரப்பப் படாத மதம்.
12.எதையும் கொன்று உண்ணலாம் என்று
தொடங்கிய ஆதி மனித உணவு
முறையிலிருந்து "கொல்லாமை ""புலால்
மறுத்தல்",ஜீவ காருண்ய ஒழுக்கம், என்று
மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்த
மதம்.சைவம் என்ற வரையறை உள்ள மதம்.

1 comment: