Friday, March 27, 2015

ஸ்ரீவீரபத்திரருக்கு பிடித்த மலர்கள்

சம்பங்கி, செம்பருத்தி :

ஸ்ரீவீரபத்திரருக்கு உகந்த பூக்கள் சம்பங்கியும் செம்பருத்தியுமே. இப்பூக்களைக் கோவில் நந்தவனத்திலிருந்து ஸ்ரீவீரபத்திர உபாசகர் தாமே தம் கைகளால் பறித்துக் எடுத்துவர வேண்டும். மலர்களை ஸ்ரீவீரபத்திர உபாசகர் தாமே தம் கைகளால் மாலையாகத் தொடுக்க வேண்டும்.

இரண்டு சம்பங்கிக்கு ஒரு செம்பருத்தி என்ற எண்ணிக்கையில் மாலை தொடுக்க வேண்டும். மாலை தொடுக்கும் போதோ தொடுத்த மாலையை இறைவனுக்குச் சூடும்போதோ மூச்சுக்காற்று படுதல் கூடாது. ஸ்ரீவீரபத்திரருக்குச் சூட்டிய மாலையை எடுத்து எவருக்கும் கழுத்திலும் கரத்திலும் சூட்டக்கூடாது.

ஸ்ரீவீரபத்திரரை வணங்கும் அடியவர்களுக்கு இம்மாலையிலிருந்து இரண்டு பூக்களை மட்டுமே எடுத்து அளிக்க வேண்டும். பூக்களைப் பிரசாதமாகப் பெற்றவர்கள் அப்பூவினைத் தலையில் சூடலாம். ஆனால் அப்பூக்கள் எக்காரணம் கொண்டும் கீழே விழுதல் கூடாது. எவர் காலிலும் படுதல் கூடாது.

எனவே பூக்களைப் பெற்ற அன்பர்கள் அப்பூக்களை இறைவன் அளித்த வரமாகக் கொண்டு பயபக்தியுடன் பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜை மாடத்தில் வைப்பது நல்லது. திருக்களும்பூர் ஸ்ரீரண வீரபத்திரர் கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரருக்கு அனைத்து வகையான மலர்களையும் சூடுகிறார்கள். பெருந்துறையில் உள்ள ஸ்ரீவீரபத்திரருக்கு, சிவப்பு மலர் மாலையும், வில்வ மாலையும் சூட்டுகின்றனர்.

தும்பைப்பூ :

வீரபத்திரர் தும்பை மாலை சூடிப்போருக்குச் சென்றார் என்று தக்க யாக பரணி கூறுகிறது. எனவே வெற்றிக் கடவுளான வீரபத்திரர் தும்பை மாலையைச் சூட்டி வழிபடுகின்றனர். ஆணவம் அகற்றி பிறவியறுத்தல் என்ற மருந்தைத் தருபவர் ஸ்ரீவீரபத்திரர். இதற்காக தும்பையை மாலையாகச் சூட்டுகின்றனர்.

வீரபத்திரர் பத்திரகாளிக்குத் தும்பைப்பூ மாலைகளை அணிவித்து வழிபட்டால் அவர்கள் நமது எதிரிகளைத் தொலைத்து துன்பத்தை நீக்கி நல்வாழ்வு அளிப்பார்கள் என்று நம்புகின்றனர். பவானி சங்கமேசுவரர் கோவில் உள்ள வீரபத்திரரைக் குல தெய்வமாகக் கொண்டோர் தும்பைப்பூ சூடி வழிபடுகின்றனர்.

கொன்றை மலர் :
வீரபத்திரருக்குப் பொன்னிறமான கொன்றை மலர் மாலையை அணிவித்து வழிபடும் வழக்கமும் உள்ளது. மாடக்குளம், வீரபத்திரர் கோவில் உள்ள ஸ்ரீவிரபத்திரருக்குக் கொன்றை மாலை சூட்டுகின்றனர்.

No comments:

Post a Comment