Thursday, March 5, 2015

ஒரு சீடனுக்கு அவனுடைய குரு மீது அபார பக்தி

ஒரு சீடனுக்கு அவனுடைய குரு மீது அபார பக்தி.. அவர் கூப்பிட்ட உடனே, இருவருக்கும் இடையில் இருந்த நதியைக் கடக்கவேண்டி இருந்தது. குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே தண்ணீரில் நடந்து வந்து குருவை நமஸ்கரித்தார். குருவுக்கு அகந்தை வந்து விட்டது. என் பெயருக்கே இவ்வளவு சக்தி இருந்தால் அதைத் தரித்து இருக்கும் எனக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்று எண்ணீனார். அவரது சக்தியைச் சோதித்துப் பார்க்க மறு நாள் நதியில் இறங்கினார். “நான், நான், நான்”– எவ்வளவு சக்தி உடையவன் என்று எண்ணிய மாத்திரத்தில் அவர் நதிக்கடியில் போய்ச்சேர்ந்தார். பாவம் நீந்தக் கூடத் தெரியாது!
நம்பிக்கை மகத்தான அற்புதங்களைச் சாதிக்கும். அகந்தை மனிதனை அழித்து விடும்”.

1 comment: