Monday, January 21, 2013

ராமாவதாரம்

வைகுந்தத்தில் துவார பாலகர்களாக இருந்த ஜயன், விஜயர்கள் அடுத்த ஜென்மத்தில் இராவணன், கும்பகர்ணன் ஆக பூமியில் பிறந்தார்கள்.
விசுவரசு என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சளி என்பாளுக்கு குபேரனும், இரண்டாவது மனைவி கேகயி என்பவளுக்கு இராவணனும் பிள்ளைகளாக பிறந்தனர்.
கேகயி, தன் மகன் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என நினைத்து மகனை அதற்காக தவம் செய்யுமாறு கூறினார். இராவணனும் கடும் தவம் புரிந்தான்.
தவத்தின் இறுதியாக, தனது தலையை திருகி, அக்கினியில் இட்டு, தவத்தினை பூர்த்தி செய்ய நினைத்து, தனது தலையை திருகப் போகும் போது பிரம்மன், அவன் முன் காட்சி அருளினார்.
இராவணன், அவரிடம் தனக்கு, தேவர்களாலோ, அரக்கர்களாலோ, விலங்குகளாலோ மரணம் நேர கூடாது என்ற வரத்தினை பெற்றுக்கொண்டான்.
இவ்வாறு தான் பெற்றுக்கொண்ட தவ வலிமையினால் தேவலோகத்தினை அதிரச் செய்தான். தேவேந்திரனை வென்று அமராவதியை கைப்பற்றினான்.
பூலோகத்தில், இலங்கை முதலில் குபேரனிடம் இருந்தது. குபேரன், தன் தம்பி இராவணன், இலங்கையை விரும்பி கேட்டு விட்டதால், அவனுக்கே அதனை கொடுத்து, இலங்கேசுவரன் என்ற பட்டத்தினையும் சூட்டினான்.
எனினும் பறக்கும் தன்மை கொண்ட புஷ்பக விமானத்தினை குபேரன் தனக்கு தராமல், தன்னுடன் கொண்டு சென்று விட்டான் என கோபம் அடைந்து, அண்ணன் என்று கூட பாராது, படை எடுத்து சென்று, அவனிடம் இருந்த புஷ்பக விமானத்தினை கைப்பற்றினான்.
இராவணனின் செயல்கள் நாளுக்கு நாள் வரம்பு மீறி சென்று கொண்டிருந்ததால், தேவர்கள் வேறு வழி இன்றி பிரம்மாவிடம் சென்று முறையிட, வரம் அளித்த பிரம்மாவோ அவனை அளிக்க வழி தெரியாமல் சிவனிடம் சென்றார். சிவனோ அனைவரையும் அழைத்து கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.
இராவணன், பிரம்மனிடம் சாகாவரம் கேட்டு கொள்ளும் போது தனக்கு 'மனிதனால்' மரணம் நேர கூடாது என கேட்கவில்லை. இதனை கூறிய மகாவிஷ்ணு, தான் ராமவதாரம் எடுத்து இராவணனை அளிப்பதாக அறிவித்தார்.
பூமியிலே, சூரிய வம்சத்தினை சேர்ந்த தசரத சக்கரவர்த்தி என்பவர் அயோத்தியை ஆண்டு வந்தார். அவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேகி என மூன்று மனைவிகள்.
நீண்ட காலமாக மூன்று பேருக்கும் குழந்தைகள் இல்லாததால் புத்திர காமாட்சி யாகம் செய்து மூவரும் குழந்தை பாக்கியம் பெற்றுக்கொண்டனர்.
கோசலைக்கு மகாவிஷ்ணுவின் அம்சமாகிய ராமனும், சுபத்திரைக்கு சேஷசம்சமாக இலட்சுமணனும், சங்கின் அம்சமாக சத்துருக்கனும், கைகேயிக்கு சக்கரத்தாழ்வார் அம்சமாக பரதனும் பிறந்தனர்.
நால்வரும் வசிஷ்ட முனிவரிடம் கல்வி பயின்று வந்தனர். விசுவாமித்திரர் எனும் முனிவர், தாம் செய்ய விருக்கும் யாகத்திணை அசுரர்களிடம் இருந்து காக்க, இராமன், இலக்சுமன் ஆகியோரை அழைத்து சென்றார்.
அவர்களுக்கு சில மந்திரங்களையும் உபதேசித்தார். யாகம் முடிந்த பின், விசுவாமித்திரர் இரு இளவரசர்களையும் மிதிலைக்கு அழைத்து சென்றார். அங்கே ஜனகர் எனும் அரசர் வைத்திருந்த வில்லை ஒடித்து ஜானகியை திருமணம் செய்து கொண்டார் இராமன்.

மன்னர் தசரதர், இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய விரும்பி அதற்கான ஏற்பாட்டை செய்தார். அனால் கைகேகி, கூனி என்பாள் பேச்சினை கேட்டு தசரதர் இடம் தன் மகன் பரதனே நாட்டை ஆளவேண்டும், இராமன் காடு செல்ல வேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றிக் கொண்டாள்.
அதன் படியே இராமன், சீதை, லட்சுமணன் மூவரும் வனவாசம் சென்றார்கள். பிள்ளைகள் காடு சென்ற அதிர்ச்சி தாங்காமல் தசரதர் உயிர் துறந்தார்.
இராமன் காட்டில், குகன் எனும் ஓடக்காரரின் உதவியுடன் பரந்துவாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு சென்றார். பின் சித்ரக்கூடத்தில் இராமன் தன் மனைவி தம்பியுடன் தங்கி இருந்தார்.
அண்ணனின் பட்டாபிசேக விழாவுக்கு, ஏனைய மன்னர்களை அழைக்க சென்று இருந்த பரதன் ஊர் திரும்பி தனது தாயின் இழி செயலை கண்டு குமுறி இராமனை அழைத்து வர சித்திர கூடம் சென்றான். அனால் இராமர், பதினான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தான் நாடு திரும்புவேன் என கூறி பரதனை அனுப்பி வைத்தார்.
அதன் பின்னர் மூவரும் சித்திர கூடத்தில் இருந்து வெளியேறி தண்டகரன்யத்தில் முனிவர்களுடன் வாழ்ந்து வந்தனர். அப்பகுதிக்கு வந்த இராவணனின் தங்கை சூர்ப்பனகை இராமன் மீது மோகம் கொண்டு அணுகியதால், மூக்கறுபட்டாள்.
இதனால் சூர்ப்பனகை தன் அரக்கர் கூட்டத்தினை அழைத்து வந்து இராமனுடன் போரிட, பல அரக்கர்கள் அழிந்தார்கள். இந்த நிகழ்வே இராவணன் அழிவுக்கு ஆரம்ப காரணமாக அமைந்து விட்டது.
மூக்கு அறுபட்ட சூர்ப்பனகை, இராமனை பழி வாங்கும் நோக்குடன் இலங்கை சென்று, சீதையின் பேரெழில் குறித்து, இராவணனிடம் வர்ணித்தாள்.
இது இராவணன் மனதில் ஆசையை தூண்ட, அவனும் வஞ்சகமாக சீதையினை கவர்ந்து வந்து இலங்கையிலே அசோகவனத்திலே சிறை வைத்தான்.
சீதையை மீட்க இராம, லட்சுமணருக்கு வாயு புத்திரன் ஆன அனுமன் உதவி கிடைத்தது. அனுமன் தன் ஆற்றலினால் இலங்கை சென்று சீதை இருக்குமிடத்தை அறிந்து வந்தார்.
அதன் பின் அனுமனின் உதவியுடன் கடலில் பாலம்
அமைத்து இலங்கை சென்றனர். இராமனின் படைக்கும் இராவணன் படைக்கும் மிக கடும் யுத்தம் நடந்து இறுதியில் இராமன் இராவணனை அழித்து, அவனது தம்பி விபிசணனை, இலங்கை வேந்தனாக முடி சூட்டினார்.
இராவணன் சிறையில் இருந்த சீதை, தீக்குளித்து, தான் மாசற்றவள் என உலகிற்கு நிரூபித்த பின்னரே, இராமர், அயோத்தி திரும்பி பட்டாபிசேகம் செய்தார்.
எனினும் தன்னைப்பற்றி குடிமக்கள் சிலர் அவதூறாக பேசுவதை பொறுக்க முடியாமல், இராமன், கருவுற்று இருந்த சீதையினை காட்டுக்கு அனுப்பி வைத்தார்.
சீதை, வால்மீகி முனிவரது ஆசிரமத்தில் தங்கி இருக்கையில் லவ, குச எனும் இருவரை ஈன்றாள். அதன் பின் தன் வாழ்வு நீங்கி பூமியினுள் மறைந்தாள்.
இராமனும் இறுதியில் சரயு நதியில் இறங்கி தன் ராமாவதாரத்தினை முடித்து கொண்டு வைகுந்தம் சென்றார்.

No comments:

Post a Comment