Thursday, January 31, 2013

பிரம்மகத்தி தோஷம்

பிரம்மகத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் பெரிதாகச் சொல்லப்படுகிறது. கொலை செய்தல், மாற்றான் மனைவியை கவர்தல், பண மோசடி செய்தல் போன்ற செயல்களால் பிரம்ம கத்தி தோஷம் ஏற்படும்.

கீழ்க்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டிக் கொண்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆலந்துறையார், கீழப்பழுவூர் (அரியலூர்), திருநோக்கிய அழகிய நாதர், திருப்பாச்சேத்தி (சிவகங்கை), பிரம்ம சிரகண்டீஸ்வர், திருக்கண்டியூர் (தஞ்சாவூர்), ஸ்ரீ புவனேஸ்வர், திருப்பைஞ்ஞீலி (திருச்சி), கொழுந்தீஸ்வரர், கோட்டூர் (திருவாரூர்), திருமறைக்காடர், வேதாரண்யம் (நாகப்பட்டினம்).



ஒவ்வொரு சிவன் கோவிலிலும், வடகிழக்கு பகுதியில் தனிச்சந்நிதியில் கால பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. கால பைரவர் பாம்பை பூணூலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.

பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. எமபயம் தவிர்க்கப்படும். பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்பு பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்

No comments:

Post a Comment