Thursday, January 31, 2013

புத்திர தோஷம் என்பது

சில தம்பதியருக்கு திருமணம் ஆகி, பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கும். அதற்கு அந்த தம்பதியருக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
பொதுவாக குழந்தை இல்லாததற்கு எட்டுவிதமான புத்திர தோஷங்கள் காரணமாக இருக்கின்றன. இவை அனைத்தும் நம்மைச்சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும். அந்த 8 வகை தோஷங்கள் வருமாறு:-
1.சர்ப்ப சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
8.மந்திர சாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்.
இந்த புத்திர தோஷங்கள் எப்படி உருவாகின்றன தெரியுமா?
பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும், அவர்களை வேதனைப்படுத்தியதாலும், அவர்களின் கடைசிக் காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு சாபம்.
இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது. எப்போதும் ரத்த உறவுகளால் அவமானமும், வேதனையும் ஏற்படும்.
சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களை தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வது சகோதர சாபம். அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
சாதுக்கள், மகான்கள் சிவனடியார்களை அவமானப்படுத்துவதால் பிராம்மண சாபம் உண்டாகும். இதனால் குறைகள் உடைய குழந்தைகள் பெற்றெடுக்கும் கடுமையான புத்திர தோஷம் ஏற்படலாம்.
மனைவியைக் கொடுமைப்படுத்துவதால் ஏற்படுவது பத்தினி சாபம். இதனால் மனைவி மக்களால் அவமானப்படுதலும், பண்டாரம், பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசி காலத்தில் தன்னை கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும் ஏற்படும்.
மந்திர சாபம், பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களை தேடிப்போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி, சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும்.
இந்த சாபத்தால் நோய்கள் உண்டாகி படாதபாடு படுத்திவிடும்.சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிக்க நேரிடும். குடும்பம் விருத்தியில்லாமல் போய்விடும். இந்த புத்திர தோஷத்தை நீக்கிட குருபகவானுக்கு வியாழக் கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.
எந்த கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்த கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.
குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் செய்து வரலாம்.

No comments:

Post a Comment