Monday, January 21, 2013

சுவாமி சிலைகளில் எண்ணெய்ப் பிசுக்கைப் போக்க மாக்காப்பு போட்டிருக்கும்போது தரிசிக்கலாமா?

சுவாமி சிலைகளில் எண்ணெய்ப் பிசுக்கைப் போக்க மாக்காப்பு போட்டிருக்கும்போது தரிசிக்கலாமா?
கூடாது. காலை பூஜை முடிந்த பிறகு மாக்காப்பு போட்டு ஊறவைக்க வேண்டும். மாலை பூஜை ஆரம்பிக்கும் முன் சுத்தப்படுத்தி, அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி அலங்கரித்து அதன்பின்பே வழிபட வேண்டும்.

* பூஜையறையில் பீடம், மேற்கூரையில் கும்பம் போன்ற அமைப்பு வைத்துக் கட்டியுள்ளேன். இது சரியா?
பூஜையறையில் சுவாமிபடங்கள், சிறிய விக்ரஹங்கள் வைத்து வழிபடலாம். பீடம் வைத்து பிரதிஷ்டை செய்தால் அஷ்டபந்தன மருந்து சாத்த வேண்டும். கும்பம் வைத்து விட்டால், அது கோயிலாகவே மாறிவிடும். வீட்டு பூஜைமுறை வேறு. கோயில் பூஜைமுறை வேறு. கோயிலில் வீடும், வீட்டில் கோயிலும் இருப்பது கூடாது.

1 comment: