Thursday, January 31, 2013

சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட கோதானம்

சனிக்கிரக பீடை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி போன்ற சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட, கோபூஜையும், கோதானமும் செய்ய வேண்டும். இத்தகு அதிவிசேஷமான,மகத்துவம் நிறைந்த பூஜை கோபூஜையே ஆகும். கோதானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:-

*கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.

*நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.

*தலை ஈற்றுப் பசுவை தானம் செய்வது மிகவும் சிறந்தது.

*கறவையுள்ள பசுவைத் தானம் கொடுப்பதே முறை.

*தாயையும்,பால் அருந்தும் கன்றையும் பிரித்து தானம் அளிக்க கூடாது.

*பசுவோடு காளையையும் சேர்த்து தானம் செய்வது மேன்மையாகும்.

*பால் கறப்பதற்கான பாத்திரமும் சேர்த்து கொடுத்தல் வேண்டும்.

*பசுவைத் தானம் செய்யும் போது, குறைந்தது ஒரு வருட உணவிற்கும் பராமரிப்புக்கும் பொருளாகவோ, பணமாகவோ வகை செய்வது-இன்னும் மேன்மை தரும்.

No comments:

Post a Comment