Monday, January 21, 2013

கல்கி அவதாரம்

நடந்து கொண்டிருக்கும் கலியுக காலத்தின் இறுதியில், மகாவிஷ்ணு எடுக்கவிருப்பதே கல்கி அவதாரம் ஆகும்.
கலியுகத்தின் முடிவில் யசாஸ் எனும் பிராமணரின் மகனாக, மகாவிஷ்ணு பிறப்பு எடுப்பார்.
கவர்ச்சியான முகத்துடன், சகல வல்லமையும் பெற்றவராக திகழ்வார்.
சிரஞ்சீவியான பரசுராமர் இடம் சென்று சகல கலைகளையும் கற்று, உபதேசமும் பெற்றுக் கொள்வார்.
பின் வெள்ளை குதிரை மீதேறி மூன்று நாட்களில் உலகினை சுற்றி வருவார். அக்கிரம செயல்களை எதிர்த்து, அதர்ம செயல்கள் புரிவோரை அழித்து தருமத்தினை நிலை நாட்டுவார்.
அத்துடன் கலியுகம் முடிவுக்கு வரும்.

No comments:

Post a Comment