Monday, January 21, 2013

கண்திருஷ்டி பற்றி

கண்திருஷ்டி பற்றி விளக்கம் தேவை.
பிறர் பார்த்து பிரமிக்கும் விதமாக ஒன்று இருந்தால் திருஷ்டி தோஷம் உண்டாகி விடும். இதனைப் போக்குவது அவசியம். மிளகாய் வத்தல், உப்பு, நடைபாதை மண் ஆகிய மூன்றாலும் திருஷ்டி பட்டவர்களுக்கு வலமாக மூன்று முறையும், இடமாக மூன்றுமுறையும் சுற்றி நெருப்பில் போட வேண் டும். இதனை "கண்ணேறு கழித்தல்' என்பார்கள். திருஷ்டி என்பது தவிர்க்க முடியாதது. கழித்து விட்டால் பாதிப்பு உண்டாகாது.

* புத்தாண்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்ய வேண்டும்?
மங்களகரமான புத்தாண்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம். பிறர் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது மிக நல்ல விஷயம். ஒவ்வொருவரும் இப்படி எண்ணத் தொடங்கினால் உலகில் ஏற்றத்தாழ்வு இருக்காது. பிறகு என்ன? எல்லாருக்குமே மகிழ்ச்சி தானே.

No comments:

Post a Comment